வடக்கில் ஆபத்தான முறையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றவதற்கு விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
முப்பது பேர் கொண்ட முன்னாள் பெண் போராளிகள் அணியொன்றை கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பலர் ஏற்கனவே வடக்கில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டவர்கள் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஆறு அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் பெண் போராளிகள் அந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக