வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின்(வயது 28) திடீர் மரணம் தொடர்பாக சிங்கள வைத்தியர் பிரியந்த செனவிரட்ணவை தடுத்து வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான நந்தகுமாரின்
ஆனைக்கோட்டை இல்லம் மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்றினால் சனிக்கிழமை இரவு தாக்கப்பட்டது.
அவரையும் அடித்து இருக்கின்றார்கள். நந்தகுமார் இது சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அந்நபர்கள் வீட்டையும், வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர் என்றும் அவரைத் தாக்கினர் என்றும் அவர் அம்முறைப்பாட்டில் கூறி உள்ளார்.
தர்ஷிகா படுகொலைச் சந்தேகநபரனான வைத்தியரை தாக்கினார் என்று குற்றஞ்சாட்டியே அவரைத் தாக்கினர் என்றும் அவர் அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக