செவ்வாய், 20 ஜூலை, 2010

பிரியந்தவை சிறையில் வைத்திருந்த அதிகாரி மீது தாக்குதல்!

வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின்(வயது 28) திடீர் மரணம் தொடர்பாக சிங்கள வைத்தியர் பிரியந்த செனவிரட்ணவை தடுத்து வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான நந்தகுமாரின்
ஆனைக்கோட்டை இல்லம் மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்றினால் சனிக்கிழமை இரவு தாக்கப்பட்டது.


அவரையும் அடித்து இருக்கின்றார்கள். நந்தகுமார் இது சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த அந்நபர்கள் வீட்டையும், வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர் என்றும் அவரைத் தாக்கினர் என்றும் அவர் அம்முறைப்பாட்டில் கூறி உள்ளார்.


தர்ஷிகா படுகொலைச் சந்தேகநபரனான வைத்தியரை தாக்கினார் என்று குற்றஞ்சாட்டியே அவரைத் தாக்கினர் என்றும் அவர் அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக