காவற்துறை திணைக்களத்தின் 4 முக்கிய பிரிவுகளான விசேட அதிரடிப்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
வினால் நிர்வகிக்கப்படுவதுடன் தன்னை தவிர வேறு எவருடைய உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டாம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேற்கூறிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவற்துறையின் உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்
பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு என்பன இதுவரை
காலமும் காவற்துறை மா அதிபரின் நிர்வாகத்திலேயே இயங்கி வந்தன.
விசேட அதிரடிப்படை பிரிவு சிறிது காலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியதுடன் நிர்வாக நடவடிக்கைகளை மாத்திரமே பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது குறித்த 4 முக்கிய பிரிவுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள கோத்தபாய இதன் பொறுப்பதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக