திருகோணமலை ,கந்தளாய், பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவ படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் இரு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒரு சிப்பாய் உட்பட ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் இருந்த இராணுவ களஞ்சியத்தில் இராணுவகுழுவினர்ஆயுதங்களை
ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனை அவதானித்த காவலில் இருந்த படையினர் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் தமது உறுப்பினர்கள் இல்லையென உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனராம். மறுவளமாக ஆயுதங்களை ஏற்ற வந்தவர்களும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். சம்பவத்தில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவர் உட்பட இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். காயப்பட்ட சாரதியான பொதுமகன் ஒருவருரும் சிப்பாயும் சிகிச்சைகளுக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துக்கு காரணமாகவிருந்த சந்தேகநபர்கள் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேகநபரைக் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேருநுவர பொலிஸார் மேலும் கூறினர். பிந்தி கிடைத்த தகவலின் படி இராணுவத்தினர் தப்பி சென்ரவர்களை கைது செய்துள்ளதாக கூறினாலும் அவர்கள் பற்றி மேலதிக தகவல்களை கூற மறுத்துவிட்டனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக