இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 7 ஜூலை, 2010
காலம் நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!
கலவரம் கொள்ளாதே நிலவரம்
நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!
இந்த உலகம் உனக்கு சிறையல்ல
நீதான் கைதியாய் வாழ்கிறாய்
விடியல் வர காலங்கள் பல ஆகலாம்
ஆனால்
விடியல் நிச்சயம் வரும் மனதை சிதறவிடாதே!
'எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,
அவனால்
நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது!"!
'தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய இருக்கிறது!"
சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே!
உனதுரிமையைக் கேள்!
சலுகை நிரந்தரமானதல்ல!
உரிமை மட்டுமே நிரந்தரமானது!
போராட்டமானது ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக