புதன், 7 ஜூலை, 2010

இங்கு என்ன தான் நடக்குது எம் இனமானம் போகிறது...........

யாழ்ப்பாணம் தன்மானத் தழிழனின் கலாச்சார பூமி புலம்பெயர் தமிழனின் அடையாளம்..
இங்கு தான் என்ன நடக்கிறது
யாழின் முதல் குடிமகன் எங்கடை அரச அதிபர் அது தான் கணேஸ் ஜயா
டக்ளஸ் மாமாவின் துதி பாடலும்,, மகேஸ்வரி நிதியமென்று பண கையாடலும்
மட்டுமா......இல்லையே...........
ஊர் சண்டியன் போல சண்டித்தனங்களூம்,,கொலை மிரட்டல்களும்,,கப்ப அறவீடுகளும்
என்னய்யா நடக்குது


சிங்களவனின் செருப்பாக,,சிங்களவனின் காலில் வீழ்ந்து வணங்குவதா?..
.எம் தமிழ் மானம் எங்கு போயிற்று..
ஐயகோ!!!! நல்லூரானே யாரிடம் முறையிடுவது.யாரை தான் நோவது?........
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று
ஆரியகுளம் சந்தியில் பிற்பகல் என்ன நடக்குது இப்போ........
கோட்டை முனியப்பர் கோவில் பற்றைகளிற்க்குள் ஜோடிகளின் சங்கமங்கள்.
மொழி தெரியா பெண்டுகளின் உரசல்கள்...
யாழ் மாநகர சபையோ மனைவி,கணவன் தம்பதிகளாய் நடத்தும் அட்டூழியம்,நிதி
கையாடல்கள்,,மோசடிகள்,,பழிவாங்கல்கள்,கடத்தல்கள்.
ஐயகோ..........நாம் என்ன செய்ய யாரைத்தான் நோவது..........
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று
பல்கலைகழக தம்பிகளின் ஆவேச பேச்சுகளை காணவில்லை அவர்களின் வாய்களை மெளனம் ஆக்கிய யார்?
தேர்தல் என்றவுடன் கத்திதிரிந்த அறிமுகமான,அறிமுகமில்லாத கனவான்களை
காணவில்லை கண்டால் கேட்டதாக சொல்லுங்கோ...
நீதவான்களுக்கே நீதியில்லாத போலி உலகமிது,
போலிகளிலும், மாயைகளிலும்,,புரள வைக்கிறது சிங்களம்
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக