தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை விட்டு பிரிந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களின் வாகனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த கும்பல் நீண்ட காலமாக இவ்வாறு வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களை தயாரித்து 21 வாகனங்கள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக