வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு வாகனங்கள் விற்பனை நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளை விட்டு பிரிந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களின் வாகனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த கும்பல் நீண்ட காலமாக இவ்வாறு வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களை தயாரித்து 21 வாகனங்கள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக