எல்லாம் போயிற்று ,எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு இன்னும் நம்புகிறார்கள்....என்னை, உன்னை ,
எம் எல்லோரையும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக