செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நிருபமா ராவின் நெருங்கிய நண்பனாம் !!!!! ......டக்ளஸ்

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதேவேளை, அரசு தனது தேவைக்காகத் தமது காணிகளை எடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தடுத்து, தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் நடைபெற்ற வேளையிலும், போருக்குப் பிந்திய வேளையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதி இந்திய அரசு எடுத்திருக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக