ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வவுனியாவில் ஜே.வி.பி அலுவலகம் திறப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கட்சிக் காரியாலம் திறப்பு வைபவத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மக்கள் விடுததலை முன்னணியின் ஊடக பிரிவு தெரிவித்தது.குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு காணி வழங்கியவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாண்டிக்குளம் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் குறித்த இடத்திற்கு வந்து ஆதரவாளர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும். மேலும் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் என்றுக் கூறி சிலர் திறந்து வைக்கப்பட இருந்த ஜே.வி.பி காரியாலயத்திற்கு சென்று, ஏற்பாட்டுக் குழுவினரிடம் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.இருப்பினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும் மக்கள் விடுததலை முன்னணி ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக