மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கட்சிக் காரியாலம் திறப்பு வைபவத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மக்கள் விடுததலை முன்னணியின் ஊடக பிரிவு தெரிவித்தது.குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு காணி வழங்கியவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் குறித்த இடத்திற்கு வந்து ஆதரவாளர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும். மேலும் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் என்றுக் கூறி சிலர் திறந்து வைக்கப்பட இருந்த ஜே.வி.பி காரியாலயத்திற்கு சென்று, ஏற்பாட்டுக் குழுவினரிடம் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.இருப்பினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும் மக்கள் விடுததலை முன்னணி ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக