வியாழன், 2 செப்டம்பர், 2010

பிரபாகரன் அவர்களையும் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லியே பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது இந்த ஒட்டுண்ணிகளுக்கு....

முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.


அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும்
தீவிரமாக அது வேறு வடிவம் எடுத்து விடகூடாது என்பதில் சிங்களவர்களை விடவும் இந்திய தேசியவாதிகளும், தமிழ் நாட்டின் சோனியாவின் அடிவருடிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.


பிரபாகரன் என்ற ஒற்றை ஆளுமையின் கீழ் மட்டுமா ஈழத்தின் சுதந்திரம் இருந்தது. அத்தனை குழுக்களும் தடுமாறி, திசைமாறி எதிராளியின் குண்டி கழுவ சென்று விட்டபின், ஈழம் அமைந்தால் அது பிரபாகரன் அவர்களின்
தலைமையில்தான் அமையும் என மாறிவிட்டது பிரபாகரனின் தவறா?


புலிகளை காரணம் காட்டியே பிழைப்பை நடத்தி வந்த டக்ளஸ் மற்றும் கருணா கும்பல்கள் இப்போது சொந்த நாட்டிலேயே முகாம்களில் கைதிகளாய் அடைபட்டு கிடக்கும் எம் இனப் பெண்களை கூட்டி கொடுத்தல்லவா பிழைப்பை தொடர்கிறார்கள்.


இப்போது புதிதாக ஒருத்தர் கிளம்பியிருக்கிறார், தான் பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற முயன்றேன் நெடியவனும், கேஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என புதிய திரைக்கதை எழுதுகிறார். மேலும் இந்தியாவின் தலைவர்களையும் அதிலும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்கிறது அந்த பேட்டி.


பிரபாகரன் அவர்களையும் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லியே பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது இந்த ஒட்டுண்ணிகளுக்கு.


இவ் அடிவருடிகள் கிடைக்க கூடிய உரிமையும் குழிதோண்டி புதைத்து ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்கள மக்களுடையதாக மாற்றிவிட்டுதான் மறு வேலையே பார்ப்பார்கள் போல இருகிறது. இந்த நாய்ப் பிழைப்புக்கு .........


கண்முன் நடக்கும் அநியாங்களை காணப் பொறுக்காமலேயே தற்கொடைப் படையாகக் கூட மாறி சிங்களனை பயங்காட்டி தமக்கென தேசம் ஒன்றை உருவாக்கி அதனை உலகின் மிக சிறந்த உதாரணமாக வழி நடத்தினர் விடுதலைப்புலிகள்.


ஆனால் இந்தியாவில் காங்கிரஸ் அரசு வந்தபிறகு ராஜபக்சே அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு ஓட்டு மொத்தமாய் உலகை தன் பக்கம் வைத்துக் கொண்டு கோரத்தாண்டவம் ஆடியபோது அதனை கவனிக்காத மாதிரி கண்களை மூடிக் கொண்ட இந்திய ஊடகங்கள் இப்போது சேவாக்கின் சதம் தவறியதற்கு பொங்கி எழுகிறீர்கள்.


அடுத்து கூட்டணி காங்கிரசுடன் வைத்துக் கொள்ள இரண்டு பெரிய(?) திராவிட கட்சிகளும் போட்டி போடுகின்றன, ஆட்சியையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான், மற்றபடி இங்கிருக்கும் தமிழன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை, ஈழத் தமிழன் செத்தால் என்ன? இருந்தால் என்ன?


மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் தனக்கென பிடித்தாலும் பிடிக்காவிட்டலும் தன்னை மிகப்பெரிய அளவில் நேசிக்கும் தமிழர் கூட்டம் இருக்கிறது என்று தெரிந்துமே காங்கிரஸ் மாதிரி தமிழ்நாட்டில் காணமல் போய்க் கொண்டிருக்கிற கட்சிக்கு கலைஞர் பயப்படுவது.


காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த ஒரு உண்மையான தொண்டனின் உறுப்பினர் படிவம் வரை பறித்துக் கொண்டீர்கள் நீங்கள். ஆனால் அங்கு மேடைக்கு மேடை முழங்கும் இளங்கோவனையும், கார்த்தியையும் யாரும் கண்டிக்கவே இல்லை.


சரி இனி ஈழம் மலருமா? என்பது இங்கு அனைவருக்கும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு நமக்கு விரிவான பார்வை வேண்டும், வெறுமனே நம்பிக்கையில் பிரபாகரன் இருக்கிறார் என்று அவரை தேடுவதைவிட அவர் நேசித்த நாம் நேசித்த தமிழ் மக்களை அகதியாக்கி சிறையில் வைத்திருக்கும் கொடுமைகளை அகற்றவும் அவர்கள் புனர்வாழ்வு பெறவும் இப்போது பாடுபட வேண்டும்.




நாம் வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் இருந்துகொண்டு தனி ஈழம்தான் நமது லட்சியம், பிரபாகரன் நிச்சயம் உயிரோடு இருக்கிறார், அவர் கண்டிப்பாக தமிழ் ஈழம் பெற்று தருவார் என பேசுவதும். இங்கிருக்கும் தலைவர்களை நாடு கடந்த தமிழீழ தனியரசை ஏற்படுத்தியவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும். அங்கு ஒரு வேலை உணவுக்கு திண்டாடும் மக்களை மேலும் பாதிக்கவே செய்யும்.


எனவே லட்சியங்களை சற்று தூர வைத்துவிட்டு எதார்த்தங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருக்கும் மக்களின் மனநிலையோடு நம்மை பொருத்திப் பார்த்து அவர்களுக்கான இப்போதைய சுதந்திரம் மற்றும் மீள்குடியேற்றம் இவற்றை மட்டுமே பேசினால். கருணா, டக்ளஸ், கே.பி.மற்றும் இங்கு அதனை வைத்து பிழைப்பை நடத்தும் பெரும்பாலோருக்கு சிங்களனே ஆப்படிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக