சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் நட வடிக்கைகள் தொடர்பில் உளவு பார்க்கப்படுவதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகள் இவ்வாறு கண்காணிக்கப்படுவதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உளவுப் பணிகளை மேற்கொள்வதற்காக விசேட பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான உயர் இராணுவ அதிகாரிகள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் சாரதிகளாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் உளவாளிகள் கடமையாற்றி வருகின்றனர்.
இவ்வாறு உளவாளிகள் அதிகளவில் ஈடு படுத்தப்பட்டுள்ளதால் உயர் இராணுவ அதிகாரிகள் கருத்துக்களை வெளியிட அஞ்சுவதாக குறிப்பிடப்படுகின்றது .இதேவேளை சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் நாட்டு மக்கள் காட்டிவரும் அக் கறையை அறிந்து கொள்வதற் காக பெருமளவிலான புலனாய்வு அதிகாரிகள் நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த சிங்கள இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
நடைபாதை வியாபாரிகள், முச்சக்கர வண்டி சாரதிகள், லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் போன்ற தோரணையில் இந்தப் புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக