முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றையும் அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.''வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்
வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும், குடும்ப அங்கத்தவர்களை இழந்தவையாக அங்கவீனமடைந்தவையாக அல்லது தாய் தந்தையை இழந்தவையாகக் காணப்படுகின்றன. அவர்களுக்கு அரசிடமிருந்தோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் கிடைக்கவில்லை. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் அதேவேளை, அங்குள்ள இராணுவத்தினருக்கு குடியிருப்புகளை அமைத்து அவர்களின் குடும்பங்களை அங்கு குடியேற்றுவதிலும் அரசு அக்கறை காட்டி வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும் பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றையும் அமைக்கும் வேலையில் அரசு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் பாரிய கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு திட்டமிட்டவாறு, இராணுவ குடியிருப்புகள் அமைக்கப்படுமாக இருந்தால் 4 இலட்சம் சிங்களவர்கள் வடக்கில் குடியமர்த்தப்படலாம். இது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக