வியாழன், 2 டிசம்பர், 2010

ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடையக் கேட்டவர்கள் எல்லோரும் மெளனமாக இருக்கின்றனர். சொல்கைம் எங்கோ ஓடி மறைந்துவிட்டார்.. வாயே திறப்பதில்லை.
சிங்களம் தமிழினப் படுகொலையை இன்று நேற்றல்ல 1952 இல் இருந்து ருசித்து ருசித்து எந்த ஒரு சர்வதேச விசாரணைக்கும் இடமின்றி செய்து வருகிறது. இந்திய வல்லாதிக்கம் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருந்து காய்நகர்த்தி தமிழின அழிவை ஊக்குவித்து வருகிறது.
இந்த இரண்டும் இந்தப் பூமிப்பந்தில் எனியும் இருக்கத்தான் வேண்டுமா...???!
தற்போதைக்கு இந்தக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தினாலும்.. கொசவோ போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி.. மாண்ட இந்த வீரர்களினதும்.. மக்களினதும் கனவான தமிழீழம் மீட்டெடுப்பதே இவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
உயிர் வாழும் ஒவ்வொரு இனமானமுள்ள தமிழனும்.. அதற்காகப் பாடுபட வேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக