உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!!
மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!!
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!!
தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்தனை ராஜபக்ஷேவை அவன் கொன்றிருப்பானோ!!!!!!!?
எம் மண்ணின்; வீரமென் தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான் கொந்தியிருக்கின்றன!!
ஜென்மம் எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது இருக்கும் - அவன் மீதான; அவளின் கோபம்! யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்.. மண்ணும்.. வானும்.. மரமும் செடிகளும் - பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
அந்த கொடுமைக்கு உடனே தண்டனை கொடுப்பதெனில்!!
யாரோ ஒருவனுக்கு துணிவிருந்தால் அவள் கையில் ஒரு அரிவாளை கொடுத்துவிட்டு சொல் - உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் – அவள் நூறு பேரை அறுத்திருப்பாள்!!
எனக்கு மரணத்தை இபொழுதேக் கொடு;அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த என் தமிழச்சியின் வெற்றுடம்பை ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
விடமாட்டன்
பதிலளிநீக்கு