வியாழன், 2 டிசம்பர், 2010

மானத்தி அவள்......தமிழச்சி!!

 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!!


 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!!

அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள்,


அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!!


 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்தனை ராஜபக்ஷேவை அவன் கொன்றிருப்பானோ!!!!!!!?
எம் மண்ணின்; வீரமென் தமிழச்சிகள்,


நாய்கள் கொன்றுவிட்டு தான் கொந்தியிருக்கின்றன!!

 ஜென்மம் எத்தனை எடுத்தாலும் இனி


ரத்தத்தின் ஒரு துளியிலாவது இருக்கும் - அவன் மீதான; அவளின் கோபம்!  யாரும் சாட்சிக்கு வேண்டாம்


காற்றும்.. வெளிச்சமும்.. மண்ணும்.. வானும்.. மரமும் செடிகளும் - பார்த்துக் கொண்டு தானிருந்தன


அந்தக் கயவர்களை!!

அந்த கொடுமைக்கு உடனே தண்டனை கொடுப்பதெனில்!!

யாரோ ஒருவனுக்கு துணிவிருந்தால் அவள் கையில் ஒரு அரிவாளை கொடுத்துவிட்டு சொல் - உன்னை இப்படிச் செய்வேனென்று;

அந்த அரிவாளில் -

உன்னைப் போல் – அவள் நூறு பேரை அறுத்திருப்பாள்!!
 எனக்கு மரணத்தை இபொழுதேக் கொடு;

அதற்கு ஈடாக -

இணையத்தில் தெரிந்த என் தமிழச்சியின் வெற்றுடம்பை ஈழ விடுதலையால் போற்று,

இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!

1 கருத்து: