விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ். நகரவர்த்தகர்கள் இருபது பேரிடம் நேற்றுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்.வணிகர் கழகத்திற்குட்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப் பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த சில மாதங்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொழும்புத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இந் நிலையில் நேற்று யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் யாழ்.வர்த்தகர்கள் இருபது பேரை அழைத்து யாழ்.வணிகர் கழகத்தில் வைத்து விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக