ஞாயிறு, 5 டிசம்பர், 2010

குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை???!!!

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ். நகரவர்த்தகர்கள் இருபது பேரிடம் நேற்றுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்.வணிகர் கழகத்திற்குட்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப் பட்டு வருகின்றனர்.


இது தொடர்பான விசாரணைகள் கடந்த சில மாதங்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொழும்புத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.


இந் நிலையில் நேற்று யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் யாழ்.வர்த்தகர்கள் இருபது பேரை அழைத்து யாழ்.வணிகர் கழகத்தில் வைத்து விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக