இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்குள் பான் கீ மூனிடம் கையளிப்படவிருந்த நிலையில் அக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்சு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக