இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 15 ஜனவரி, 2011
ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக