இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 15 ஜனவரி, 2011
பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!
இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக