இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
அரசுடன் பேசும் வாய்ப்பு இந்த மாதம் ஏற்படலாம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை தென்படுவதாக,, அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உண்மையாக செயற்பட்டால் எமது முன்மொழிவுகளை கையளிப்போம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைய வேண்டும். மற்றும் சமஷ்டி முறையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகார பரவலாக்கம் இடம்பெற வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாபகப்படுத்தினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக