ஞாயிறு, 2 ஜனவரி, 2011

அரசுடன் பேசும் வாய்ப்பு இந்த மாதம் ஏற்படலாம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை தென்படுவதாக,, அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உண்மையாக செயற்பட்டால் எமது முன்மொழிவுகளை கையளிப்போம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைய வேண்டும். மற்றும் சமஷ்டி முறையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகார பரவலாக்கம் இடம்பெற வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாபகப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக