இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார்
புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார் இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிவகுல வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சோதிநாதன் கோபிநாத் (வயது – 27),என்பவரே நேற்று காணமற் போய்யுள்ளார் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 7.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு HIRE வந்திருப்பதாகவும், உடனே போய்ட்டு வருவதாகவும் கூறிய கோபிநாத் இன்றுவரை வீடு திரும்பவில்லை. கோபிநாத் வீடு திரும்பாததை அடுத்து, அவரது மனைவி தனது கணவர் காணமற் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார். கோபிநாத் ஒரு பிள்ளையின் தந்தையாவார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக