ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

விசாரணை மே 14 ஆம் திகதிக்குள் நடத்தவேண்டிய நிலை

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் மேமாதம், 14 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய ஒருவர் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு இராணுவச்சட்டத்திற்கு உட்படுத்தப்படுவர் என்ற அடிப்படையில் இந்த வரையறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் அவர், இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாவிட்டால்,சிவில் நீதிமன்றத்திலேயே அவருக்கு எதிரான விசாரணையை நடத்தமுடியும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சிரேஸ்ட படையதிகாரியான லெப்டினன்ட் ஜெயசூரிய மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோர் சரத் பொன்சேகாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், இராணுவத்தின் நீதிபதி சட்டத்தரணி ஜெனரல் இந்திர விஜயரட்ன, வழக்கு விசாரணை தொடர்பான திகதி உட்பட்ட தீர்மானத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஊடக இணைப்பாளர், தங்குமி;ட வசதிகளை செய்து கொடுத்தவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகளுக்கு கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக