ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

தாஜ்மஹால் என்றால் நினைவுக்கு வருவது ...............

தாஜ்மஹால் என்றதும் நினைவுக்கு வருபவன் சாஜகானே அன்றி, தாஜ்மகாலை கட்டிய கொத்தனார் அல்ல' . அதுபோல் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட்டமைக்கு எமது முறையான தலைமையே காரணம் என மக்கள் நம்புகின்றார்கள். அதனால்தான் நாம் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தது' எனத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறிலங்காவில் சுமுகநிலை தோன்றுவதற்கு இந்தியா மிகுந்த பலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா எமது உறவினர். உதவி புரிந்துவரும் மற்றைய நாடுகள் எமது நண்பர்கள் ' எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, தமிழ்மக்கள் தமக்கு வாக்களிக்காதது குறித்து தமக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் தாம் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், தமக்கு அந்த ஆச்சரியத்தைத் தந்திருப்பவர்கள் குறிப்பாக சிங்களக் கிராமமக்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். தமிழ் அரசியற் தலைமைகள் உரிய உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், புதிய தமிழ்தலைவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதெனவும், அவவ்வாறு உருவாகும் புதிய தலைமைகளுடன், புதிய சிந்தனைகளின் அடிப்படைடயில் பேச்சுவார்த்தை மெற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக