ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வடக்கிலும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளது

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலை கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். வடபகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி, வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சி கிழக்கு பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக