சனி, 20 பிப்ரவரி, 2010

சக்தி தொலைக்காட்சியில் மின்னல்.............

சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர். அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்மையை கூறுவதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மை மறுதலையானது, மகிந்த ராஜபக்சாவின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சாவின் அமைப்பான தருன்யட்ட ஹெடக் என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராக சிறீரங்கா செயற்பட்டு வருகின்றார். அவர் நமால் ராஜபக்சாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக சித்தரித்து நாமலை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் சிறீரங்கா ஈடுபட்டு வருகின்றார். சிறீலங்கா மகிந்தாவையோ அல்லது நாமாலையோ ஆதரிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக