சனி, 20 பிப்ரவரி, 2010

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவை

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயம் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்தா கொக்னி ரெக் என்ன அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட கானொளிகள் உண்மையானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக