இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 20 பிப்ரவரி, 2010
அரசின் அடுத்த குறி ..........?
வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. “வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு
புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்கல்களு டன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள தனிப்பட்ட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக