சனி, 20 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்,

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள இரு ஆயுதக் குழுக்களின் முகாம்க ளையும் அகற்றி வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி வர்த்தகர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதேசத்தில் கடந்த ன்று மாத காலப் பகுதிக்குள் எட்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட் கள் கொள்ளையிடப்பட்டதையடுத்து வர்த்த கர்கள், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்கள் சூழ இருக்கின்ற செங்கலடிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது ஆயுதக்குழுக்களின் கைவரிசையே என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் செங்கலடி வர்த்தகர்களிடம் தொலைபேசி லமாக கப்பம் கோரப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எனினும் முறைப்பாட்டாளர்கள் பின்னர் தொலை பேசி மூலம் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக