சனி, 20 பிப்ரவரி, 2010

இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் படம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இயேசு கிறிஸ்து ஒரு கையில் சிகரெட்டையும், இன்னொரு கையில் பீர் டப்பா ஒன்றையும் வைத்திருப்பது போன்ற படங்களுடன் அச்சிட்டு வெளியான ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய மாநில கல்வி அமைச்சர் அம்பரீன் லிங்டோ அறிவித்துள்ளார். இவ்வாறு பாடப் புத்தகம் அச்சிடப்பட்டது, சர்வமதத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் இந்தியப் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கத்தோலிக்கத் தேவாலாய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட பதிப்பாளர், கத்தோலிக்கப் பள்ளிகளில் எந்தவிதப் புத்தகங்களையும் விற்பனை செய்வதற்கு இந்திய கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக