சனி, 20 பிப்ரவரி, 2010

அமெரிக்காவில் பயங்கரவாதம் - மனிதாபிமானம் தொடர்பான பிரித்தறியும் வழக்கு,

அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அல்-ஹை டா, குர்திஸ் விடுதலை அமைப்பு, விடுதலைப்புலிகள் ஆகியன அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டன. ஆனால் குறித்த அமைப்புக்களுடன் தொடர்பான அல்லது அந்த இனம் மதம் சார்ந்த மனிதாபிமான அமைப்புக்கள் நிவாரணம், புனர்வாழ்வு, சமாதானம் தொடர்பில் பணிபுரிகின்றன. ஆனால் இந்த தன்னார்வ அமைப்புக்களை பயங்கரவாதத்திற்கு உதவியவர்கள் என்ற பேரில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மட்டுமன்றி பயங்கரவாத அமைப்புக்களிற்குள்ளும் மனிதாபிமான அமைப்புக்கள் பல பணிகளை செய்து வருகின்றன. ஆகவே இவைகளை இனம் கண்டுஇவர்களது தடைகளை நீக்கி செயற்படவைக்கவேண்டும் என இடது சாரிஅமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மனிதாபிமான சட்டங்களிற்கான திட்டம் என்ற அமைப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக