இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
வீட்டில் யாழப்பாணப் பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
தெஹிவளை, களுபோவில ஜயசிறி மாவத்தையிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தமிழ் பெண் ஒருவரின் சடலத்தை தெஹிவளைக் காவல்துறையினர் நேற்று காலை மீட்டுள்ளனர்.
பெண்ணின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டபோது அவர் தனது கையில் கூரிய ஆயுதமொன்றை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான சின்னத்தம்பி கனகதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் அவரது மூளைவளர்ச்சி குன்றிய மகளுடன் தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்திய வீட்டில் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெஹிவளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக