இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
பள்ளியில் புகுந்து ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன்
ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் லுட்விங்ஸ் கேபின் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொழிற்பள்ளி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அங்கு 23 வயதான முன்னாள் மாணவர் ஒருவர் புகுந்தார். அவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார்.
பின்னர், திடீரென வகுப்பறைக்குள் புகுந்த அந்த நபர் 58 வயது ஆசிரியரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த ஆசிரியர் அவருக்கு சரியான முறையில் பாடம் கற்றுத்தரவில்லை. மாறாக அவரை தவறான முறையில் வழி நடத்தி உள்ளார். எனவேதான் அவரை பழிக்கு பழி வாங்க குத்திக்கொன்றது தெரிய வந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக