வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

மாணவி ஒருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்கும் 18 வயதான மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். யாழ் நகரிலுள்ள தனியார் கல்விநிறுவனத்தில் கல்விகற்பதற்காக அன்றையதினம் மாலையில் தனது சைக்கிளில் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் பின்னர் திரும்பி வரவில்லை என யாழ்ப்பாண போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோரால் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவரின் பெயர் லங்கேஸ்வரன் குணதீபா. இவர் கொக்குவிலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவராவார். தமது மகளைக் காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் தெரிந்தவர்களைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களிலும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக