இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
மாணவி ஒருவரைக் காணவில்லை
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்கும் 18 வயதான மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். யாழ் நகரிலுள்ள தனியார் கல்விநிறுவனத்தில் கல்விகற்பதற்காக அன்றையதினம் மாலையில் தனது சைக்கிளில் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் பின்னர் திரும்பி வரவில்லை என யாழ்ப்பாண போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோரால் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவரின் பெயர் லங்கேஸ்வரன் குணதீபா. இவர் கொக்குவிலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவராவார்.
தமது மகளைக் காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் தெரிந்தவர்களைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களிலும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக