வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

பெளத்த பீடங்களின் கீழ் உள்ள கோயில்களை பறிக்க போவதாக மிரட்டல்

பெளத்த பீடங்கள்தமது சொல்லை கேட்காவிட்டால் அதன் கீழ் உள்ள கோயில்களை பறித்து புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என ஆளும் தரப்பு மிரட்டியுள்ளது. மேற்கு மாகாணத்தில் உள்ள 500 வரையான கோயில்களை இவ்வாறு பிரித்து புதிய பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்படும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேல்மாகாண அரசியல் வாதிகள் பெளத்த பீடங்களை மிரட்டியுள்ளனர். ரோகண நிக்காய என்ற அங்கீகரிக்கப்படாத பெளத்த அலகு ஒன்றினை புனரமைத்து அதனை அங்கீகரித்து அதன் கீழ் பெளத்த கோயில்கள் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர் மஹிந்தவின் சகாக்கள். போகின்ற போக்கினை பார்த்தால் மஹிந்த மகா சங்கம என்ற புதிய பீடத்தினை உருவாக்கி அனைத்து பீடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார் என்ற பதட்டம் பிக்குகளுக்கு வந்துள்ளதாம். எது எப்படி இருப்பினும் இலங்கையில் ஐந்தாவது பீடம் ஒன்று உருவாகலாம் என விமர்சகர்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக