வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்

செட்டிகுளம் மெனிக்பாம் தடுப்பு முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து 10 பேரும், கிளிநொச்சியிலிருந்து 17 பேரும், முல்லைத்தீவிலிருந்து 14 பேரும், மன்னாரிலிருந்து 4 பேரும் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக