வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம்...

தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக