இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம்...
தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக