ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அர்ஜனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி

நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும். முன்னைய மூன்றாம் தரத் தமிழ்ப் புத்தகத்தில் ஒரு கதை. நிமால் பந்தையடி. பாலா பந்தைப்பிடி. அது அந்தக் கதையின் சாரம். சிங்கள நிமாலும் தமிழ்ப் பாலாவும் ஒற்றுமை யாக விளையாடுகின்றனர் என்பதை காட்டுவதற் காக அந்தக் கதை சோடிக்கப்பட்டது. கதைகதையாக இருந்தமையால் பாடம் பாதை மாறியது. நிமாலும் பாலாவும் பந்தை மட்டுமல்ல; வெடி குண்டையும் அடித்துப் பிடித்து விளையாடி பார் வையாளர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். நிமாலும் பாலாவும் சேர்ந்து பந்தை அடியுங் கள், பாகிஸ்தானையும், சீனாவையும் தோற்கடி யுங்கள் என்று பாடப்புத்தகத்தில் கதை எழுதியி ருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்குமோ என ஏழை மனம் எண்ணுகிறது. விளையாட்டின் ஊடாக இன ஒற்றுமையை வலியுறுத்தியதெல்லாம் கடந்து இப்போது எல்லாம் விளையாட்டாக மாறிவிட்டது. இந்த விளையாட்டில் நாடாளுமன்றமும் விளையாட்டு மைதானமாக மாறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் ஏற்படுத்திக் கொடுக்குமென நம்பலாம். ஆம். எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக் கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெய சிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும். நாடாளுமன்றத்தில் அடிக்கப்படும் பந்து எங் கள் தமிழ் எம்.பிக்களின் தலைகளில் படாமல் இருக்க-சுசந்திகாவின் மூச்செறிந்த ஓட்டத்தால் எங்கள் மூத்த தமிழ் எம்.பிக்களின் இதயத் துடிப்பு தடைப்படாமல் இருக்க அந்த ஆண்டவன் தான் உதவவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக