ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்?

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்: ஒபாமா அச்சம் அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், “இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது. சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதையை மட்டுமே அமைத்து வருகிறோம். எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்பை நாம் உருவாக்க தவறிவிட்டோம். இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. தூய்மையான மின்சக்தி தொழில்நுட்பத்தை எந்த நாடு கண்டுபிடிக்கிறதோ அந்த நாடுதான் 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தலைமை தாங்கப் போகிறது. இந்தப் போட்டியில் நாம் காத்திருக்க முடியாது. ஏனெனில் இந்தியா காத்திருக்க போவதில்லை. சீனா காத்திருக்கப் போவதில்லை” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக