சனி, 6 மார்ச், 2010

பெண்ணுக்கு இடையூறு விளைவித்த 4பொலிஸார் கைது

நேற்று இரவு மவுண்ட் லாவணியா கடற்கரையிலுள்ள மதுக்கடைக்கு அருகில் தனிமையில் நின்ற பெண்ணைக் கிண்டலடித்து தொந்தரவு செய்த பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் நால்வரும் மதுவருந்தி விட்டு மேற்படி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் கோபமுற்ற பெண்ணின் உறவினர்கள் மவுண்ட் லாவணியா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மதுவருந்தியதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதேவேளை தொந்தரவுக்கு உள்ளான அந்தப் பெண்ணும் மது அருந்தியிருந்தாரா? எனச் சோதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸாரும் மவுண்ட் லாவணியா குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மக்களிடையே நடக்கும் குற்றங்களை தடுக்கவென நியமிக்கப்படும் பொலிஸாரே தற்போது அதிகமாகக் குற்றங்கள் புரிந்து வருவது இலங்கையில் அதிகரித்து வரும் ஒருபோக்காக காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக