வியாழன், 25 மார்ச், 2010

பரிந்துரைக்கின்றது சிறிலங்கா !

பலஸ்தீனத்திலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீனத்தின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதையடுத்து சிறிலங்கா தனது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருக்கிறது. அமைதி முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் மோசமடைந்திருக்கும் கள நிலைமையினை மீண்டும் சீர்செய்வதற்கும் ஏற்ப தொடர்புடைய தரப்புக்கள் சுய கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வோடும் நடந்த கொள்ள வேண்டும் என சிறிலங்கா அழைப்பு விடுத்திருக்கிறது. அனைவரும் விரும்புவதைப்போல, இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனை தான் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வினைத் தரும் என சிறிலங்காக உறுதியாக நம்புகிறது. இவ்வாறான ஒரு தீர்வு, பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவருவதோடு - சுதந்திரமன, இறையாண்மை மிக்க, நீடித்து நிலைக்கக் கூடிய பலஸ்தீனத் தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிர, பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள். பலஸ்தீன நிலப்பரப்பினை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து நிற்பது தான் அங்கு மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காமல் தொடர்வதற்கான அடிப்படைக் காரணம் என சிறிலங்கா வாதிடுகிறது. ஆதலினால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்த இஸ்ரேலியர்களின் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இவை - தவிர காசா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இவ்வாறு சிறிலங்கா தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக