வியாழன், 25 மார்ச், 2010

இலங்கைக்கான நிபுணர்கள் குழு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது: பான் கி மூன்

இலங்கையில் போர் குற்றம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் மற்றும் இலங்கைக்கான ஐ. நா.வின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் செயற்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த, பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவுக்கான ஆட்களை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமது அரசியல்துறை செயலாளர் லின் பாஸ்கோ, இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற ஜப்பான் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக