இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 25 மார்ச், 2010
இலங்கைக்கான நிபுணர்கள் குழு அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது: பான் கி மூன்
இலங்கையில் போர் குற்றம் தொடர்பில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியார் மற்றும் இலங்கைக்கான ஐ. நா.வின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன ஆகியோர் செயற்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த, பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவுக்கான ஆட்களை தேர்வுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமது அரசியல்துறை செயலாளர் லின் பாஸ்கோ, இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த நிபுணர்கள் குழு அமைக்கப்படுவது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற ஜப்பான் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக