இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 மார்ச், 2010
வயாகரா மாத்திரையில் பறவையின் கழிவுகள்
மனிதர்களின் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் நச்சு பொருட்கள் கலக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.சிலவற்றில் பறவைகளின் மல கழிவுகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக “வயாகரா” மாத்திரையில் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது.
நியூசிலாந்தில் இவை கலக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வவ்வால்கள் மற்றும் பறவைகளின் எச்சங்கள், மிக சிறிய பூச்சிகள், உரோமங்கள், மரக்கரி போன்றவையும் சேர்க்கப்பட்டு அவை தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு விஞ்ஞானி தல்லாஸ் மில்டன் ஹால் தெரிவித்துள்ளார்.
இவை தவிர நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்கள் மற்றும் பாதரசம் போன்றவையும் வயாகராவில் கலக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
எனவே, ஆன்லைனில் இவற்றை மிகவும் கவனமாக வாங்க வேண்டும் என்று ஒட்டாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிளார் ஸ்ட்ராசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக