இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 18 மே, 2010
தமிழ் ஈழத்தில் வன்னிப் பெருநிலத்தில் 17 ஆம் நாள் மே 2009 அன்று சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்காகவும், எம் மண்ணை மீட்க தம் உயிரை ஈகம் செய்த மாவீரருக்காகவும் Leicester சிவ முருகன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு ஒன்று தேசத்தின் பாலம் உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப் பட்டு நடாத்தி முடிக்கப் பட்டது. இதில் பல மக்களும் வேறு பாடின்றி கலந்து கொண்டு ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தனர். கோவிலின் பிரதம குரு உரையாற்றுகையில், தமிழரின் காவல் தெய்வம் முருகப் பெருமானே என்றும், எம் இனத்தை அழித்தவர்களை எம் பெருமான் என்றோ ஒரு நாள் சங்காரம் செய்வார் என்றும் குறிப்பிட்டார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக