திங்கள், 17 மே, 2010

புலிகளின் நடமாட்டம் -இராணுவம் எச்சரிக்கை

மன்னார் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நட மாட்டம் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது . மன்னர் பகுதி கட்டுக்குள் ரோந்து சென்ற படையினர் மனித நடமாட்டத்தின் காலடி சுவடுகளை கண்டு பிடித்துள்ளனர் . ஆங்காங்கே தமது காலடி சுவடுகளை அழித்த வண்ணம் புலிகள் நகர்ந்து சென்றுள்ளனர் . இந்த பகுதியில் உலவும் புலிகளிட்க்கு உணவுகள் கொடுப்போர் மீதும் அவர்களை பாதுகாப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க படும் என இராணுவம் மக்களை எச்சரித்துள்ளது . மன்னார் பகுதி தொடர் கிளிநொச்சி முல்லை காடுகள் வரை இந்த மனித காலடி சுவடுகளை இராணுவம் பரவலாக கண்டறிந்துள்ளது .இதை அடுத்து மன்னார் மற்றும் பரந்தன் பகுதியில் அதனை சுற்றியுள்ள மக்களை கூட்டதிட்க்கு அழைத்த படையினர் இந்த பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அவரக்ளிட்க்கு உணவு மற்றும் அடைக்கலம் மற்றும் தகவல் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மக்களை அழைத்து எச்சரிக்கை செய்து படையினர் அனுப்பி யுள்ளனர் . அத்தோடு யாரவது புலிகளின் நடமாட்டத்தை சந்தேக மாணவர்களை கண்டால் தமக்கு அறியத் தரும்படி படையினர் மக்களிற்க்கு கூறி அனுப்பி யுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக