திங்கள், 17 மே, 2010

சூசை அண்ணையின் இறுதி வார்த்தைகள் கடந்தவருடம் ...................

நாம் அடிபணியப் போவதில்...
உலகம் கைவிட்ட உறவுகள் 25000 பேர் கோர மரணம்!’ – தளபதி சூசை பேட்டி வன்னி: தமிழ் ஈழ போர் முனையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் சிங்கள ராணுவம் மேற்கொண்ட கொலை வெறித் தாக்குதலில் வரலாறு காணாத இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது. படுகாயமடைந்த 25000 தமிழர்கள்
முள்ளி வா...ய்க்கால், இரட்டை வாய்க்கால் பகுதிகளில் பிணங்களாக வீசியெறியப்பட்டுக் கிடப்பதாக, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கர்னல் சூசை சிறிது நேரத்துக்கு முன் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடல்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார். இலங்கை படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதாகவும் சூசை இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக ஊடகங்களுக்காக தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். கைவிட்ட அனைத்துலக சமூகம்! “படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பிவைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை” எனவும் சூசை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்தார். சுமார் இரண்டு கிலோ மீட்டர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் இலங்கை படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர். போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட இலங்கை படையினர் அனுமதிப்பதில்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர் எனவும் சூசை குற்றம் சாட்டினார். அடிபணியப் போவதில்லை! இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது குறித்து எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார். நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதிவரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச்சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள், தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார். கடைசி நிமிடங்களில் ஈழப்போர்…! போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீட்டர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்” எனவும் சூசை தெரிவித்தார். இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது இலங்கை படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் எனவும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது இலங்கை அரசாங்கம். இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்றொழிப்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேவருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக