இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 3 ஜூன், 2010
இன்னொரு தமிழ் கட்சி உதயம்,,,,,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறீகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து தமிழ் தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இந்த புதிய கட்சி எதிர்வரும் வட மாகாண தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் ஒத்துப்போகும் ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தமது கட்சியுடன் இணைத்துக்கொள்வது தொடர்பாக தாம் சிந்தித்துவருவதாகவும் -இந்த விடயங்கள் தொடர்பாக ஏனைய தமிழ் கட்சிகளுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் நடத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியின் பொது செயலர் சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கட்சியை தேர்தல் ஆணையகத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா மேற்கொண்டுவருகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக