யுத்த காலத்தில் குண்டு வைக்கச் சொன்னவர்களுக்கு ஆடம்பர வசதிகளை வழங்கி அவர்களை அமைச்சர் பதவிகளில் இருத்தி விட்டு அவர்களது கட்டளைகளின் படி செயற்பட்டவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என
நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சரணடைந்த தமிழ். அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட ஸ்ரீரங்கா அவசர காலச் சட்டம் இவர்களைத் தொடர்ந்து அடைத்து வைப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
வடக்கு கிழக்கில் ஒரு சட்டமும் தெற்கில் வேறொரு சட்டமும் நடைமுறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டிய ஸ்ரீரங்கா இது இனங்களுக்கிடையில் மேலும் பிளவுகள் ஏற்படுவதற்கே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக