போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த முதற்கட்ட விசாரணைகளைத் தாம் ஆரம்பிக்க இருப்பதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் ஓமந்தை வாயிலாக இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்கள் குறித்தும் தாம் விசாரணை நடாத்த உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
2009 மற்றும் 2010 காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து 1100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று காணாமல் போனவர்கள் குறித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணையகத்திலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
எனினும் அதிகளவானோர் காணாமல் போனதாகக் கருதப்படும் வன்னியில் இதுவரை மனித உரிமை ஆணையகத்திற்கான அலுவலகம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் விரைவில் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி தாம் முடிவெடுக்க உள்ளதாகவும் இது தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணையத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கிளிநொச்சியில் ஒரு தற்காலிக அலுவலகத்தைத் திறப்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக