நாம் மடியேறி முத்தமிட்ட மண்ணை மொட்டை மரமென மூளியாக்கினான் எதிரி.
தென்றல் காற்று கைவிட்டு போக அக்கினி காற்றே எம் சுவாசமாச்சு......
பேய்கள் ஊர் புகுந்த போது ஊர் சிதறி ஒடியிருந்தோம் யாருமற்று திரும்பி வருகையில்
சிதறியவீடும்,எம் உறவுகளின் சிதறிய எலும்பு துண்டுகளுமே எமை வரவேற்றன.....
நாதியற்று நாங்கள் கூவிய போது பேசாதிருந்தவர் இப்போ குமுறுகின்றார்.
மீண்டும் எம் தேசம் எழும் ,காற்றிப்போ எம் பக்கம் ,அண்ணாந்து பார்க்கும் அழகோடு
எம் தேசம் மிளிரும் . இதுவே எம் நம்பிக்கைகள்..
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக