திங்கள், 12 ஜூலை, 2010

நம்பிக்கைகள்..............

நாம் மடியேறி முத்தமிட்ட மண்ணை மொட்டை மரமென மூளியாக்கினான் எதிரி.
தென்றல் காற்று கைவிட்டு போக அக்கினி காற்றே எம் சுவாசமாச்சு......
பேய்கள் ஊர் புகுந்த போது ஊர் சிதறி ஒடியிருந்தோம் யாருமற்று திரும்பி வருகையில்
சிதறியவீடும்,எம் உறவுகளின் சிதறிய எலும்பு துண்டுகளுமே எமை வரவேற்றன.....
நாதியற்று நாங்கள் கூவிய போது பேசாதிருந்தவர் இப்போ குமுறுகின்றார்.
மீண்டும் எம் தேசம் எழும் ,காற்றிப்போ எம் பக்கம் ,அண்ணாந்து பார்க்கும் அழகோடு
எம் தேசம் மிளிரும் . இதுவே எம் நம்பிக்கைகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக