வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.
ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சீங்களவர்களை விடமாட்டோம் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக சீமான் தகவல் வெளியிட்டிருந்தார். இதையறிந்த பத்திரியாளர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் குவிந்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பு சீமானை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
மேலும் சென்னை பிரஸ் கிளப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்த சீமானை, போலீசார் உள்ளே நுழைய விடாமல் கைது செய்தனர்.
அப்போது பத்திரையாளர்கள் சீமானிடம் கருத்து கேட்க சென்றபோது, போலீசார் பத்திரையாளர்களை தாக்கியுள்ளனர். இதனால் போலீசாரை கண்டித்து பத்திரிûயாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருவர் மண்டை உடைந்தது.. பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நாம் தமிழர் இயக்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர்.. நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த பத்து நபர்களை காவல் துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக